×

சென்னையில் புதிய உச்சத்தை எட்டியது மின்தேவை 4,590 மெகாவாட்டாக உயர்வு

சென்னை: சென்னையில் இதுவரை இல்லாத வகையில் 4,590 மெகாவாட் மின் தேவை உயர்ந்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உச்சபட்ச மின் நுகர்வு 97.77 மில்லியன் யூனிட்டாக பதிவாகியுள்ளது. சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்ய 60 சிறப்பு நிலை குழுக்கள் மூலமாக தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், இதுவரை இல்லாத வகையில் 4,470 மெகாவாட் என்ற அளவில் இருந்த மின்தேவை கடந்த 6ம் தேதி 4,590 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல், மாநகரின் உச்சபட்ச மின்நுகர்வு 97.43 மில்லியன் யூனிட்டில் இருந்து 97.77 மில்லியன் யூனிட் வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சென்னையில் புதிய உச்சத்தை எட்டியது மின்தேவை 4,590 மெகாவாட்டாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...